அசைக்க முடியாத சக்தி - ஒரு அனுபவம்
ஓர் அன்பர் தன் அனுபவங்களை பல வருடங்களுக்கு முன் தெரிவித்தது.
அசைக்க முடியாத சக்தி என்ற கட்டுரையை படித்து அதை செயல் படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஓர் அன்பர் ஒரு நாள் இதை விளையாட்டாக ஆரம்பித்தார். தன் கூட இருந்த நண்பர் உள்ளே உள்ள அன்னையை மனதால் நமஸ்காரம் செய்தார். மனம் இதமாக இருந்தது. அடுத்தது அங்கு கண்ணில் பட்ட ஒருவரின் உள்ளே உள்ள அன்னைக்கு நமஸ்காரம் செய்தார். அதைத் தொடர்ந்து கண்ணில் பட்டவரில் எல்லார் உள்ளேயும் உள்ள அன்னைக்கு மனதால் நமஸ்காரம் செய்தார். இது தொடர்ந்தது. ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு வேலை போல் இதை செய்து கொண்டிருந்தார். ஒரு நேரத்துக்குப் பிறகு அவர் முயற்சி இல்லாமலே தானாக நடந்தது. ஒரு நாய் ரோடில் சென்று கொண்டிருந்தது. தானாகவே அந்த நாய்க்குள் இருந்த அன்னைக்கு நமஸ்காரம் அவருக்குள் இருந்த எதோ ஒன்று செய்தது. அதாவது எங்கெல்லாம் அன்னை உரைகிராரோ அதை உணர்ந்து தானே நமஸ்காரம் செய்தது.இதைத் தொடர்ந்து அவர் ஒரு நெடுஞ்சாலைக்கு வந்த உடன் அவர் கண்டது கனவல்ல. ஓடிக்கொண்டிருந்த கார்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள், பஸ்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள்,மற்ற வாகனங்களில் சென்றவர்கள் என்று ஒரு பெரும் மனிதர் கூட்டம். அந்த ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருந்த அன்னை விஸ்வரூபமாக பெரும் சக்தியாகக் காட்சி அளித்தது கண் கொள்ளாக் காட்சியாகும். அந்த அனுபவத்துடன் அவர் அன்னை தியான மையத்திற்குள் வந்து கூட்டு தியானத்தில் கலந்து கொண்ட பொழுது உள்ளே ஒரு வெள்ளொளி மிகச்சிறியதாகத் தோன்றியது. அது சிறிது சிறிதாக நெருங்கி வந்ததது. ஓரளவு நெருங்கி வந்தவுடன் அந்த வெள்ளொளி அன்னையின் உருவம் வெள்ளாடையில் வெள்ளை ஒளியாக இருந்ததை அந்த அன்பர் கண்டு பூரித்தார். இந்த அன்னை தரிசனம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்திருக்கும். பூரிப்பு அன்று இரவு முழுவதும் இருந்தது. அடுத்த நாளும் தொடர்ந்தது.
அசைக்க முடியாத சக்தி என்ற கட்டுரையை படித்து அதை செயல் படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஓர் அன்பர் ஒரு நாள் இதை விளையாட்டாக ஆரம்பித்தார். தன் கூட இருந்த நண்பர் உள்ளே உள்ள அன்னையை மனதால் நமஸ்காரம் செய்தார். மனம் இதமாக இருந்தது. அடுத்தது அங்கு கண்ணில் பட்ட ஒருவரின் உள்ளே உள்ள அன்னைக்கு நமஸ்காரம் செய்தார். அதைத் தொடர்ந்து கண்ணில் பட்டவரில் எல்லார் உள்ளேயும் உள்ள அன்னைக்கு மனதால் நமஸ்காரம் செய்தார். இது தொடர்ந்தது. ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு வேலை போல் இதை செய்து கொண்டிருந்தார். ஒரு நேரத்துக்குப் பிறகு அவர் முயற்சி இல்லாமலே தானாக நடந்தது. ஒரு நாய் ரோடில் சென்று கொண்டிருந்தது. தானாகவே அந்த நாய்க்குள் இருந்த அன்னைக்கு நமஸ்காரம் அவருக்குள் இருந்த எதோ ஒன்று செய்தது. அதாவது எங்கெல்லாம் அன்னை உரைகிராரோ அதை உணர்ந்து தானே நமஸ்காரம் செய்தது.இதைத் தொடர்ந்து அவர் ஒரு நெடுஞ்சாலைக்கு வந்த உடன் அவர் கண்டது கனவல்ல. ஓடிக்கொண்டிருந்த கார்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள், பஸ்கள், அவற்றுள் இருந்த மனிதர்கள்,மற்ற வாகனங்களில் சென்றவர்கள் என்று ஒரு பெரும் மனிதர் கூட்டம். அந்த ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருந்த அன்னை விஸ்வரூபமாக பெரும் சக்தியாகக் காட்சி அளித்தது கண் கொள்ளாக் காட்சியாகும். அந்த அனுபவத்துடன் அவர் அன்னை தியான மையத்திற்குள் வந்து கூட்டு தியானத்தில் கலந்து கொண்ட பொழுது உள்ளே ஒரு வெள்ளொளி மிகச்சிறியதாகத் தோன்றியது. அது சிறிது சிறிதாக நெருங்கி வந்ததது. ஓரளவு நெருங்கி வந்தவுடன் அந்த வெள்ளொளி அன்னையின் உருவம் வெள்ளாடையில் வெள்ளை ஒளியாக இருந்ததை அந்த அன்பர் கண்டு பூரித்தார். இந்த அன்னை தரிசனம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்திருக்கும். பூரிப்பு அன்று இரவு முழுவதும் இருந்தது. அடுத்த நாளும் தொடர்ந்தது.
After some time he happened to read a passage from The Life Divine" written by Sri Aurobindo. It reads as follows.
"When we withdraw our gaze from its egoistic preoccupation with limited and fleeting interests and look upon the world with dispassionate and curious eyes that search only for Truth, our first result is the perception of a boundless energy of infinite existance, infinite movement, infinite activity poueing itself out in limitless Space, _ _ _"
சமீபத்தில் அந்த அன்பருக்கு ஓர் அனுபவம்:
அவருக்கு எதிரிகள் மேன் மேலும் அதிகமாகிக்கொண்டே இருந்தார்கள். யாரெல்லாம் உற்ற நண்பர்கள் என்று இவர் நினைத்தாரோ அவரெல்லாம் ஏதோ காரணத்திற்காக எதிர் முனையில் நின்றார்கள். நண்பர்களாக இருந்தவர்களெல்லாம் எதிரிகளாக மாறி ஓரிரு வருடங்கள் உருண்டன. ஒருவர் சற்று சோர்ந்தால் எதிரிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போல் நிகழ்சிகள் நடந்த வண்ணம் இருந்தது. நேரடி எதிரியாக இருந்தால் உஷாராக இருக்கலாம். ஆனால் நண்பர்களாக பழகிக் கொண்டே ஒருவரைப் பற்றி எதிரான எண்ணம் கொண்டவர்களை சமாளிப்பது கஷ்டம். இப்படிப் பட்டவர்கள் சேர்ந்து ஒரு பழியைப் போட்டு அதற்க்கு விளக்கம் கொடுத்தாலும் தவறு, விளக்கம் கொடுக்காவிட்டாலும் தவறு என்ற நிலை. மௌனமே சிறந்த வழி என்று மௌனமாக இருந்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. ஒருவர் மற்றவர் மீது கோபம் கொண்டாலே அது மற்றவரை பாதிக்கும் எனும் பொழுது அடுத்தவரை அழித்து விட கங்கணம் கட்டிக்கொண்டு வெளியில் சிரித்துக்கொண்டு தந்திர முறைகளைக் கையாண்டு அடுத்தவர் உடலுக்கும் உயிருக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கிளடமிருந்துக் காப்பாற்றி கொள்வது மிகக் கடினம். பல வித போராட்டங்களைத் தாண்டி எனக்கு அன்னை போதும், வேறெதுவும் வேண்டாம் என்ற மனநிலையும் போதவில்லை. இந்த இடத்தில செய்ய என்ன இருக்கிறுது என்ற கேள்வியை அந்த அன்பர் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு அதற்கு பதிலாக ஒரு முறை இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டார்.
"One in Many" என்ற கருத்து அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. அசைக்க முடியாத சக்தி என்ற முறையில் முன்பு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இதை அணுகலாம் என்று முடிவு செயதார். இதற்கு முன் செய்யவேண்டிய செயல்களை தீர்மானித்து அதன்படி தனக்கு யாரிடமாவது அப்படிப்பட்ட கோபம் இருந்தால் அதை முதலில் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து மனதார அதைச் செய்து முடித்தார். அது பிரம்மப்பிரயத்தனம். அதன் பிறகு ஒவ்வொரு நபராக அவர் நண்பரோ எதிரியோ உறவினரோ அல்லது தொழில் ரீதியான சகவசமோ, எல்லோருடைய மனதிலும் எதோ ஒரு opinion ஆவது இருக்கும் என்ற அடிப்படையில் எல்லோரையும் முன்னிருத்தினால் அது பாரதப் போர் போன்றது.இங்குதான் வேலை ஆரம்பம். இப்போது அவர் மட்டும் ஒரு பக்கம். அவருடன் அவருள் உள்ள அன்னை மட்டும். எதிரில் மற்ற எல்லோரும். இப்போது மற்ற எல்லோரிலும் உள்ள அன்னையைப் பார்க்க முடிந்தால் வேலை முடிந்தது என்பது அவர் நிலை. விஸ்வருப தரிசனம் கிடைத்தால் அது இப்போது எதற்காக? எதிரிகளுக்குள் உள்ள அன்னை எனக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் அவர் கேள்வி. எல்லோருக்குள்ளும் உள்ள அன்னைக்கு நமஸ்காரம் செய்த பொழுது அங்கு ஒரு சக்தி எழுந்தது. அது எல்லோருக்குள்ளும் இருந்து எழுந்த ஒன்றே ஆகும். அந்த நிலையில் வந்த அனுபவம் ஒரு ஞானம் அல்லது ஒரு கருத்து புரிந்தது. தத்துவமாக தெரிந்ததற்கும் ஞானமாக எல்லா நிலைகளிலும் புரிவதற்கும் உள்ள வேறுபாடு அது. அதாவது எல்லோரும் தனக்கு எதிராக ஆகி விட்டார்கள் என்றால், அதற்கு அவர்களுக்குள் உள்ள அன்னையின் Sanction இருந்தால்தான் அப்படி நடந்துகொள்ள முடியும். அப்படியென்றால் அன்னை என்னை எங்கோ மாற்ற இவர்கள் எல்லோர்குள்ளும் செயல்படுகிறார் என்று எடுத்துக்கொண்டார். அப்படியென்றால் யாரும் எனக்கு எதிரியல்ல. தான்தான் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று புரிந்தது. தனக்குள் உள்ள எதோ ஒரு குணமோ பழக்கமோ உணர்வோ மாற வேண்டிய கட்டாயத்திற்கு அன்னை என்ற ஒன்று எதிரிகள் என்ற எல்லோரிலும் இருந்து என்னை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார் என்ற கருத்து அவருக்கு புரிந்தவுடன் அங்கு சுழல் கனத்தது. நிசப்தம் சுழலை ஆக்கிரமித்தது. ஆஹா எதிரிகள் என்று நான் நினைத்தவர்கள் எனக்குச் செய்வது பேரருளாயிற்றே . இவர்களுக்கு இந்த அன்னையை கொடுத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன் என்று கூறினார். அன்னையே என்ன உன் கருணை. எதிரி என்ற பாகுபாடு என் அகந்தைக்கே. அதைக் கடந்தால் அது அற்புதக் கடல். அது அன்னை என்னும் பெருங்கடல். நீந்த நீந்த இன்பம் தவிர வேறெதுவும் இல்லை. உடலுக்கு வலி இல்லை. மனதுக்கு ஆனந்தம். உணர்வில் பொங்கும் நன்றி. வேறெதுவும் இல்லை என்று கூறி அன்னையை நமஸ்கரித்தார்.
அடுத்த நாள் அவர் தன் அலுவலகத்திற்கு சென்றார். பொதுவாக பேச்சுகளிலிருந்து விலகியிருந்த அவரை அவர்களே அழைத்து நேற்று நமக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் எங்களுக்கு மிக்க சந்தோஷம் என்றார்கள். வருமா என்று நினைத்த ஒரு தொகை அவருக்கு வந்து சேர்ந்தது. ஒரு ஸ்தாபனத்தில் அவர் பதவி வகித்த தலைவர் பதவியைப் பற்றி குறை கூறி வந்த பழைய தலைவர், நீங்கள் நன்றாக நியாயமாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை நான் அளிக்கிறேன் என்று கூறினர். இவை அந்த அன்பர் தன் அனுபவமாகப் பகிர்ந்து கொண்டவை.